சபரிமலை புனிதப் பயணம் என்பது உணர்ச்சிகளின் ஒரு சோதனைதான். மாலையிட்டு, மலை சவிட்டி, திரும்பி வரும்வரை பக்தர்கள் எளிய வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும். இது ‘விரதம்’ என அறியப்படுகின்றது. ஒரு பக்தன் எப்பொழுது மாலை இடுகின்றானோ அன்றிலிருந்து விரதம் ஆரம்பமாகின்றது. மலைப்பயணம் செய்து சுவாமியை தரிசிக்கவேண்டும் என்ற தன் ஆவலை வெளிப்படுத்துவதற்காகவே மாலை அணியப்படுகிறது. இதனை மாலையிடல் என்பர். பக்தர்கள் துளசிமாலை அணிவது வழக்கம். அதில் ஐயப்ப உருவம் பொறித்த ‘லாக்கெட்’ கோக்கப்பட்டிருக்கும். மாலை அணிந்துவிட்டால், பக்தர்கள் உலகியல்…
Read more
பல மரங்கள் கிடு கிடுவெனமலை அருவி திடு திடுவெனஇரவு பகல் அறியாமல்பெரு மாரி பொழி காலம்பாராய் பராபரனேபரதேசிக் காவலனேவரங்கள் கொடுப்பவனேவாழ் குளத்தூராதிபனே. எதிர்க் காற்றும் பெரு மழையும்எடுத்தடி வைக்க ஒட்டாமல்பெரியாற்றின் கரைதனிலேபரிதவிக்கும் அந்நேரம்அலையாமல் தோணி கட்டிஅக்கரைக்கே கடத்தி விடும்பலம் உமக்கே சாஸ்தாவேபரதேசிக் காவலனே. கல்லோ இரும்போ கடும்வஜ்ரமோ சித்தமதுபொல்லாக் கொலைக்கோகுல தெய்வம் என்றுகை தொழுதால்கல்லும் இரங்கும் கடும்வஜ்ரமும் தான் இரங்கும்புல்லும் இரங்கும் பேய்பிடாரியும் தான் இரங்கும். உம்மை நம்பும் எங்களுக்குஒரு வினையும் வராதென்றுநினைத்திருந்து காலமெல்லாம்ஏங்குதையா எம் மனதுஓங்கி…
Read more
கார்த்திகை மாதம் பிறந்து விட்டது என்றதும் நம்முடைய நினைவிற்கு வருவது கார்த்திகை தீபம் தான். விளக்கு ஏற்றுவது என்பது இந்த மாதத்திற்கே உண்டான சிறப்பாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் மட்டும் அல்லாமல் இந்த மாதத்தில், கார்த்திகை மாத சோமவார விரதம் மிக மிக விசேஷம். சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வது பல கோவில்களில் மிகவும் பிரசித்தியாக நடைபெறும். அண்ணாமலையார் தீபம், சபரிமலைக்கு மாலை போடுபவர்கள், முருகனுக்கு வேண்டி மாலை போடுபவர்கள், என்று இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு…
Read more
பார்ச்வ க்ரஸ்தோதய சந்திர க்ரஹணம். 08.11.22 ஐப்பசி மாஸம் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை. ஆரம்பம் மாலை 05.47 மணி. மோக்ஷம் மாலை 06.26 மணி. பரிமாணம்.0.338.(Duration). ராஹு க்ரஸ்தம்.பரணி நக்ஷத்ரத்தில் பிடிக்கிறது. பரிஹாரம் செய்ய வேண்டிய நக்ஷத்ரக்காரர்கள்.அச்வதி,பரணி,கார்த்திகை,பூரம் மற்றும்பூராடம். காலை 09.00 மணிக்குள் போஜனம். மாலை 05.30 மணிக்கு க்ரஹணம் பிடித்த உடன் ஒரு ஸ்நானம். பிறகு ஜபங்கள். மாலை 06.00 மணிக்கு தர்ப்பணம். பிறகு க்ரஹணம் விடும் வரை ஜபங்கள். க்ரஹணம் விட்டவுடன் 06.30…
Read more
“லலிதா யார்??” எனும் இக்கேள்விக்கான பதிலை பாவனோபநிஷத் கூறும்!! ” ஸ்வயமேவ ஆத்மா லலிதா!!” பளிச்!! என்று ஒரே வாக்யத்திலேயே பதில்!! உனது சொந்த ஆத்மனே ஶ்ரீலலிதா!! ஸத்யமிதுவே!! தேவீ உபநிஷத்துக்களை தனிப்பதிவிலே சிந்திப்போம்!! அத்தேவீயின் மஹிமையானதை மஹாதேவனான பரமேச்வரனும் கூறவியலாது!! தூர்வாஸ மஹர்ஷி உரைப்பர் “மாதஸ்தே மஹிமா வக்தும் சிவனோபி ந: சக்யதே”“ஓ!! தாயே!! உன் மஹிமையை பரமசிவனாலும் கூற முடியாது!!” ஒப்புயர்வில்லா ஶ்ரீராஜராஜேச்வரியின் வைபவம் யாராலும் உரைக்க முடியாதது. ஶ்ரீத்ரிபுரா மஹிம்ன ஸ்தவம் கூறும்!!…
Read more
கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலையாழ்வார்”பபியா”… பூஜை நேரங்களில் குளத்திலிருந்து கோவிலுக்கு வந்து ஸ்வாமியை தரிசித்து விட்டு ப்ரஸாதம் பெற்றுவிட்டு பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தாது அமைதியாக குளத்திற்கு திரும்பிவிடுவார்! என்னதான் குளத்தில் வசித்தாலும் குளத்திலுள்ள மீன்களை உட்கொள்ளாது கோவில் ப்ரஸாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்ததால் இவருக்கு “சைவ முதலை” என்ற மற்றொரு பெயருண்டு… நேற்று இந்த முதலையாழ்வார் உடல்நலக் குறைவால் வைகுந்த ப்ராப்தம் அடைந்தார்
தாமிரபரணி ஆற்றங்கரை திவ்யதேசங்கள் – நவ கிரக தோஷங்கள் நீக்கும் நவதிருப்பதி ஆலயங்கள். திருநெல்வேலி:கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நவக்கிரகக் கோவில்கள் எப்படி சைவ, வைணவ பேதம் இல்லாமல் இரு சமயத்தாருக்கும் பரிகாரத் தலங்களாக விளங்குகின்றனவோ, அதே போல் தென் மாவட்ட மக்களுக்கு நவக்கிரக பரிகாரத் தலங்களாக கருதப்படுபவை இந்த நவ திருப்பதி கோயில்கள். தாமிரபரணி ஆற்றின் வடகரையில் 6 திவ்யதேசங்களும், தென்கரையில் 3 திவ்யதேசங்களும் உள்ள இந்த நவதிருப்பதிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வோம். வைணவ சம்பிரதாயத்தைக்…
Read more
1-ப்ரதமம் சைல புத்ரீ ச சைல புத்ரீ பர்வ ராஜன் ஹிமவானின் புத்ரீஅதனால் சைல புத்ரீ 2-த்விதீயம் ப்ரும்மசாரிணீ பார்வதி தேவி பரமேஸ்வரரை அடைய தவம்செய்தார்கள்அப்போது ப்ரும்மசாரிணீ 3-த்ருதீயம் சந்த்ரகண்டேதி சந்த்ரனை பிறையாக சூடியவள் 4-கூஷ்மாண்டேதிசதுர்தகம்ப்ரும்மாண்டத்தை ச்ருஷ்டித்தவள்ப்ரும்மாண்டத்தை வயிற்றில் உடையவள் கூஷ்மாண்டா 5-பஞ்சமம் ஸ்கந்தமாதேதி ஸ்கந்தனின் முருகனின் தாய்ஸ்கந்தமாதா 6-ஷஷ்டம் காத்யாயனீதிச காத்யாயன மஹரிஷியை ஆசிர்வதித்து அவருக்கு மகளாக பிறந்தவள் காத்யாயனீ 7-சப்தமம் காலராத்ரீதி எல்லாவித கெட்டகாலத்தையும் நாசம் செய்பவள் காலராத்ரீ 8-மஹாகௌரீதி சாஷ்டமம் வெண்மையானவள் கௌரீ…
Read more
சப்த மாதாக்கள் சப்த மாதாக்கள் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.சண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த மாதாக்கள். சண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி உண்டானவர்களே இந்த சப்த மாதாக்கள். மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண்…
Read more
நாளை முதல் மூன்று தினங்கள் லட்சுமி ரூபத்தில் அம்பாளை வணங்க வேண்டும். இந்த வருடம் திதி கணக்குப்படி சிலபேர் நவராத்ரி 9 தினங்கள் என்றும் , சிலர் எப்பொழுதும் போல் 10 தினங்கள் என்றும் கூறுகின்றனர். மகாலட்சுமி காயத்ரி மஹாலட்சுமிச வித்மகே விஷ்ணு பத்னீ ச திமகீதந்நோ லட்சுமி ப்ரசோதயாத்.இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி திருபாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள்.…
Read more